Saturday, March 26, 2022

ஹைக்கூ பழகலாம் வாங்க

 கவிஞர் நாகை ஆசைத்தம்பியின் ஹைக்கூ பழகலாம் வாங்க எனும் ஹைக்கூ கட்டுரைகள் அடங்கிய நூல் விரைவில் வெளிவருகிறது மு. முருகேஷ் அவர்கள் அணிந்துரையுடன்


Saturday, February 26, 2022

மறவனாற்றங்கரையினிலே

 புலவர்.கோவி.புலிகேசி அவர்களின் கவிதைநூல் மறவனாற்றங்கரையினிலே வெற்றிப்பெற வேண்டுகிறேன் இந்நூலில் தங்க.முருகேசன் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார் சண்முககனி அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் நாகை ஆசைத்தம்பி பதிப்புரை வழங்கியுள்ளார் இந்நூல் கோவை மாவட்டம் துடியலூர் தமுஎகசவுக்காக கவிக்குடில் வெளியிடுகிறது


Thursday, December 30, 2021

மு.முருகேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்

 அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை " நூலுக்கு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறுகின்ற என் இனிய நண்பர் மு.முருகேஷ் அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.


Saturday, December 19, 2020

ஏழிசை மீட்டும் வீணை நூல் விமர்சனம்

 


நூல் விமர்சனம்
******************

நூலின் பெயர்; ஏழிசை மீட்டும் வீணை
ஶீசெண்பகா பதிப்பகம் சென்னை
விலை70-00 பக்கம் 88
தொகுப்பாசிரியர்கள் ; ருத்ரா,இரா.ஹரிஹரன்

விமர்சனம் ; நாகை ஆசைத்தம்பி

ஏழிசை மீட்டும் வீணை தலைப்பு என்றாலும் அ(ஆ)றுசுவையாக ஆறு தனித்தனி தலைப்புகளில் ஆறு கவிஞர்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்
இரா,ஹரிஹரன்(வனம் தேடும் பறவை)
நிழலி (நதி நீந்தும் அருவிகள்)
மணிகண்டன்(சிறகு தந்த வானம்)
ருத்ரா(காற்சிலம்போசை)
சுகி(சன்னல் திறக்கும் தென்றல்)
ச.சாம்யாபேஸ்(வீணை மீட்டிய கனவுகள்)
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்திருக்கிறார் முனைவர் விசயராகவன் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவர்கள்,,

காலக்கடலில் நமக்கு வழி காட்ட அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் என்றார் எட்வின் பி விப்பிள் என்ற அறிஞர்,உண்மைதான் வாசிப்பை நேசிப்பவர்களுக்கே இதன் பொருள் புரியும் காசுக்கொடுத்து ஒரு நல்ல புத்தகத்தை வாங்குவதற்கு ஈடாக இவ்வுலகில் வேற எதையுமே வாங்க முடியாது என்றார் ஒரு அறிஞர் அப்படிப்பட்ட நல்ல நூல்களை உருவாக்கி இச்சமூகத்திற்கு நாம் கொடுத்தோமானால் நமக்கு பிறகும் பேசப்படும் நம் பெயரும் வரலாற்றில் நிலைக்கும்,,, வரலாறு முக்கியமல்லவா,,,? என்றோ வாழ்ந்த வள்ளுவரையும்,இளங்கோவையும், கம்பரையும் நாம் எப்படி தெரிந்துக்கொண்டோம் அவர்களின் படைப்புகள் மூலம்தானே அதனால் அதுப்போன்ற நல்ல படைப்புகளை நாமும் கொடுக்க வேண்டுமென்ற சிந்தனையோடு சிறகடித்து பறந்திருக்கின்றது ஆறு கவிக்குயில்கள் அக்குயில்கள் மீட்டிய ஏழிசையை இனி உங்கள் ரசனைக்கு,,,,

இத்தொகுப்பில் ஹரிஹரன் அவர்களின் கவிதை முதலில் இடம்பெறுகின்றது அவரது கோபம் என்ற தலைப்பிலான கவிதை நகைச்சுவையாக இருந்தாலும் அத பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென்ற சிந்தனையை விதைக்கிறது

டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்த
நடத்துனரின் மேல் கோபம்
ஓட்டுனருக்கு,,,
ஒவ்வொருத்தருக்காக என்றைக்கு
கொடுத்து முடிப்பது,,?
ஒரே நேரத்தில் அனைவருக்கும்
டிக்கெட் கொடுத்தார் ஓட்டுனர்,,!

அடுத்து ஒரு கவிதை நவீனதேசம் தலைப்பிலானது இதுவும் ஹரிஹரன் கவிதைதான் மிக அற்புதமான சமூகச்சிந்தனை கவிதை

பேச்சுரிமை கொடுக்கப்படும்
ஆனால் பேசக்கூடாது
எழுத்துரிமை கொடுக்கப்படும்
ஆனால் எழுதக்கூடாது
கேள்வியுரிமை கொடுக்கப்படும்
ஆனால் கேட்கக்கூடாது
வாழ்வுரிமை கொடுக்கப்படும்
ஆனால் வாழக்கூடாது
இது நவீனதேசம்,,,!

இன்றைய தேசத்தின் நிலையை அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறார் சபாஷ் ஹரிஹரன் வாழ்த்துகள்
ஆனாலும் விலைமாதர் என்ற கவிதையை தொகுப்பில் தவிர்த்திருக்கலாம் ஹரிஹரனுக்கு சமூகச்சிந்தனை கவிதைகள் சிறப்பாக வருகிறது  சாதி ஒதுக்கல் என்ற கவிதையில் நம்மை ஓங்கி அறைகிறார்

மொட்டை அடித்து
ஒதுக்கித் தள்ளப்பட்டன
அனைத்து சாதி
மயிர்களும்,,,!

மிக அருமையான சாடல் ஹரிஹரன் சாதி பெருமை பேசுபவர்களுக்கும் சாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும் செருப்படி
தொடருங்கள் ஹரிஹரன்

அடுத்து நிழலி தொடர்கின்றார்
தினமும் நாம் காணும் பேருந்து மற்றும் தொடர்வண்டி காட்சிகளை கவியாக்கியுள்ளார் அழகாக,,, உறவு என்ற தலைப்பில்,,,

பேருந்தில் செல்லும்
யாரோ ஒருவரை
சொந்தமாக்கிக் கொள்கிறது
குழந்தைகள்
டாட்டா காட்டி,,,

உண்மைதானே,,,
அடுத்து வரும் கவிதையில் நிழலி மட்டும் யோசிக்கவில்லை வாசிப்பவர்களையும் யோசிக்க வைத்துள்ளார் செய்தி என்ற தலைப்பிலான கவிதையில்,,

ஒவ்வொரு முறையும்
அழகிகள் கைது
பாவம் அழகர்களுக்கு
இடமே கிடைப்பதில்லை,,,

ஆமா,,,,அந்த அழகிகளைத்தேடிச்சென்ற ஆண் அழகர்கள் என்னவானார்கள்,,,, யோசிக்க வைப்பதுதானே படைப்பாளியின் வேலை அதை சரியாக செய்திருக்கிறார்

அடுத்து நிலை என்ற தலைப்பிலான கவிதையில் நம்மையும் நிலை குலைய வைக்கிறார்

விதவிதமாக சமைத்துவிட்டு
பழைய சோற்றுக்காக
காத்திருக்கிறாள்
வேலைக்காரி

மனதை ரணமாக்கும் சிறப்பான கவிதை நிழலி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

அடுத்து மணிகண்டன் நம்மை மயக்க வருகின்றார் கவி வரிகளில்,,, விதை என்ற கவிதையில் விதைகளை பிணம் என்ற பதத்தில் சொல்லியிருக்கிறார் அதிலிருந்து நான் மாறுபடுகிறேன் விதை என்பது உயிரை சேமித்து வைக்கும் கருவறை என்பதுதான் உண்மை அவரின் பார்வை நெருடலாக இருக்கிறது விதைகளை விதைக்கப்பட்ட புரட்சி என்று வீரியமாக சொல்லியிருக்கலாம் புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் என்ற வாசகத்தைக்கூட நீங்கள் கேட்டிருக்கலாம் எனவே இக்கவிதையில் நான் மாறுப்படுகிறேன் இதோ உங்களுக்காக அந்த கவிதை

புதைக்கப்பட்ட பிணம்
உயிர்த்தெழுகிறது
துளிர்விட்டப்போது,,,

அடுத்து ஒரு கவிதையில் நாம் தினமும் காணும் காட்சியை அழகாக தனிவழி என்ற தலைப்பில் பதிவு செய்கிறார் நான்கூட ரஜினி வழியோ என நினைத்தேன் அதுவல்ல இது வேற வழி,,,

தனக்கென்று தனிபாதை
உருவாக்கியவர்களே
தமிழர்கள்
வேகத்தடைகளில்,,,!

உண்மைதானே வேகத்தடைகளை நெருங்கும்போது சைடில் புகுந்து போவது சர்வ சாதாரணமாகிவிட்டது நல்ல சிந்தனை மணிகண்டன் வாழ்த்துகள்,,,

அடுத்து இத்தொகுப்பின் ஆசிரியர் ருத்ரா கவிதைகளை காணலாம் மதுவிலக்கு என்ற தலைப்பிலான கவிதையில் இன்றைய எதார்த்தத்தை மிக அழகாக பதிவு செய்கிறார்

மது அருந்திவிட்டு
தன் பேச்சைத் தொடர்ந்தார்
மது விலக்கை அமுல்படுத்தக்கோரி,,,!

நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகின்றார் சிறப்பு ருத்ரா அவர்களே,,,

அடுத்து கௌரவம் என்று ஒரு கவிதை இதை வாசிக்கும்போது கொரோனா காலத்து நிலை ஞாபகத்தில் வந்துப்போகிறது லாக்டவுன் வேலை இல்லை சாப்பிட வழியில்லை என எல்லோரும் சொன்னார்கள் ஆனாலும் எல்லோரும் ஆன்லைனில்தான் இருந்தார்கள்  இதுதான் கௌரவம் என்பதோ இதோ ருத்ரா கவிதை

வாடகை வீட்டில்
இருந்தபடி
சொந்தமாக கார்
வாங்கினான்
நிப்பாட்ட
இடமின்றி,,,!

மிகச்சிறப்பு ருத்ரா உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துகள் பல,,

அடுத்து தேவக்கோட்டை சுகி சன்னல் திறக்கும் தென்றலாய் வருடுகின்றார் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற கவிதையில்

அன்றாடச் செய்திகள்
அரிதாரம் பூசிவரும்
நாளிதழ்களை
அலுக்காமல் சலிக்காமல்
கொண்டு சேர்க்கும்
ஏழைச் சிறுவன்
அரை வயிற்றுக் கஞ்சிக்காக,,,

ஆமா,,,நானும் தெரியாமல்தான் கேட்கிறேன் இவர்களை எல்லாம் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச்சட்டம் ஒன்னும் செய்யாதோ,,, நல்ல சிந்தனை சுகி

அடுத்து விவசாயம் காப்போம் என்ற கவிதையில் வார்த்தை ஜாலத்தில் நம்மை வசீகரம் செய்கிறார்

விளைநிலம் வறுமையில்
விலை நிலமாகிப்போனது
விதி வசத்தால்,,!

உண்மைதான் நிலம் இல்லாத பணக்காரன் நிம்மதியாக வாழ்கிறான் நிலம் வைத்து உழைப்பவன் வங்கி வாசலில் கடனுக்கு போராடுகின்றான்
இன்னும் தீண்டாமை, கலாச்சார சீரழிவு, நவீன மகப்பேறு,போன்ற கவிதைகளும் மிக அருமையாக உள்ளது அருமை சுகி அருமை,,

அடுத்து சாம் யாபேஸ் கவிதைகளை காண்போம் இவருடைய வாழ்க்கை என்ற தலைப்பிலான ஒரு கவிதையை வாசிக்கும்போது என் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது உணவு தேவைகளுக்காக ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியது கட்டாயம் மட்டுமல்ல இயற்கையின் நீதியும்கூட,,, பாம்பு தவளையை துரத்துகின்றது தவளை பூச்சியை துரத்துகின்றது பூச்சி எதை துரத்துகின்றதோ,,,?  இந்நிலையை பதிவுசெய்தவிதம் சிறப்பு

பாம்பு விழுங்கிய
தவளையின் வயிற்றில்
பாதி செரித்த பட்டாம்பூச்சி

எத்தனை வேதனை என்றாலும் இதுதான் இயற்கை பட்டாம்பூச்சி வயிற்றில் எந்த எறும்பு இருக்கிறதோ யாருக்கு தெரியும்,,,?!

அடுத்து கூலியில்லா பணியாள் தலைப்பிலான ஒரு வித்தியாசமான சிந்தனை கவிதை

நாள் கூலியும் கேட்டதில்லை
வாரச் சம்பளமும் கேட்டதில்லை
புல் மேய்ந்த கன்றுக்குட்டிகள்

உண்மைதானே,,, புல் முளைத்த இடத்தை சுத்தம் செய்வதற்கு கூலியே கேட்காமல் என்கடன் பணிச்செய்து கிடப்பதே என்றவாறு செய்கிறது என்பது நகைச்சுவையாக இருந்தாலும் இது ஒரு வித்தியாசமான நக்கல் நையாண்டி,எள்ளல் இந்தத்தொணியில் இருக்கிறது வாழ்த்துகள்  சாம்,,,

இந்த தொகுப்பில் பெரும்பாலன கவிதை சிறப்பாக இருந்தாலும் அனைத்தையும் பதிவுசெய்ய இயலாமைக்கு வருந்துகிறேன் இக்கவிஞர்கள் தொடர்ந்து இதுப்போன்ற நூல்களை இச்சமூகத்திற்கு தருவார்கள் என்ற நம்பிக்கையில்,,,

வாய்ப்புள்ள நண்பர்கள் வாங்கி வாசிக்கலாமே,,,!

நான் இதுவரை வாசிக்காத புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னை சந்திப்பவனே என் தலைச்சிறந்த நண்பன் என்றார் ஆபிரகாம் லிங்கன்

இன்று அவர் உயிரோடு இருந்தால் இந்த புத்தகத்தோடு சென்று சந்தித்திருப்பான் இந்த விமர்சனத்தை எழுதிய உங்கள்

நாகை ஆசைத்தம்பி
எழுத்தாளர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்&கலைஞர்கள் சங்கம்
கோவை
8754879990

Monday, November 30, 2020

இறகைத்தேடும் சிறகுகள் பன்மொழி ஹைக்கூ நூல்

 இறகைத் தேடும் சிறகுகள்!

 நூல் ஆசிரியர் : கவிஞர் நாகை ஆசைத்தம்பி


நூல் வெளியீடு : கவிக்குடில், கோவை.  அலைபேசி : 87548 79990


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


*****


      ‘இறகைத் தேடும் சிறகுகள்’ நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. பெற்றோரைத் தேடும் குழந்தைகள் என்றும் பொருள் கொள்ளலாம். நூல் ஆசிரியர் கவிஞர் நாகை ஆசைத்தம்பி அவர்களின் 16ஆவது நூல். ஹைக்கூ வரிசையில் 4ஆவது நூல். இவரது முந்தைய ஹைக்கூ நூல்களுக்கு மதிப்புரை எழுதி உள்ளேன்.


      இந்த நூலின் புதுமை என்னவென்றால் பன்மொழி ஹைக்கூ நூல் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என 4 மொழி ஹைக்கூ கவிதைகளும் ஒரே நூலில் வந்துள்ளன. 4 மொழிகளில் ஹைக்கூ கவிதைகள் வந்துள்ள முதல் நூலும் இதுவே. 4 மொழிகளும் நூலாசிரியருக்குத் தெரியுமா? என்பது தெரியவில்லை. தெரிந்து இருக்கலாம். அல்ல பிறமொழி மட்டும் மொழிபெயர்ப்பாளரிடம் பெற்று படைத்து இருக்கலாம்.


      உலகின் முதல் மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம், வடஇந்திய மொழி இந்தி, அண்டை மாநில மொழி மலையாளம் – நான்கு மொழிகளிலும் ஹைக்கூ யுத்தியுடன் மூன்று வரிகளிலேயே படைத்து இருப்பது சிறப்பு. தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழி மட்டும் நான் அறிந்தது. எனவே இருமொழி சிறப்பை மட்டும் எடுத்து இயம்பி உள்ளேன். பதச்சோறாக சில ஹைக்கூ கவிதைகள்.


பாலுக்கு அழும் குழந்தை

குடம் பாலை குடிக்கிறது

சாமி சிலை


BABY CRYING FOR MILK

THE JUG DRINKS MILK

GOD STATUE


இந்த ஹைக்கூவின் மூலம் பகுத்தறிவு சிந்தனையை விதைத்து உள்ளார். ஏழைக்குழந்தை பசியால் வாடும் போது, கடவுள் சிலைக்கு பாலாபிசேகம் செய்வதில் பயனில்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். ஆங்கில மொழிபெயர்ப்பும் பொருத்தமாக உள்ளது.


நிறங்களை

நகலெடுப்பதில்லை

நிழல்கள்


COLORS

NOT COPYING

SHADOWS


நிழல் என்பது கருப்பாகவே இருக்கும். நிழல் கண்ணாடி போல வண்ணத்தை எதிர்பார்க்க முடியாது. காட்சிப்படுத்தல் ஹைக்கூவின் மூலம் சிந்திக்க வைத்துள்ளார்.


அம்மா தாயே என்றார் பிச்சைக்காரர்

அவசரமாய் வந்து போட்டேன்

கதவின் தாழ்பாள்.


SAID THE MOTHER BEGGER

I SAME IN A HURY

DOOR LATCH


ஹைக்கூ கவிதையில் மூன்றாவது வரி எதிர்பார்த்தது இல்லாமல் வேறாக இருக்கும். அவசரமாக வந்து பிச்சை போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் கதவிற்கு தாழ்பாள் போடுகிறார்கள். இன்றைய மனிதர்களும் பலர் பிச்சை போட மனமின்றியே தன்னல வாழ்வே வாழ்கின்றனர்.


தொழிற்சாலை புகை

வேகமாய் பரவுகிறது

தொற்று நோய்கள்


INDUSTRIAL POLLUTION

SPEREADS FAST

INFECTIOUS DISEASES


இந்த ஹைக்கூ கவிதையினைப் படித்தபோது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமே நினைவிற்கு வந்தது. அநியாயமாக 13 உயிர்கள் பலியானது. ஒருவழியாக மூடப்பட்ட நச்சுஆலை, இன்னும் உச்ச, உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதும் திறக்க முயற்சி செய்வதும் வேதனை.


இரண்டு லாரிகள் மோதல்

இரண்டின் முகப்பிலும்

அம்மன் துணை.


TWO TRUCKS COLLIDE

ON THE FACE OF BOTH

GODDESS SUB


அம்மன் துணை என்று எழுதி இருந்தாலும் கவனக்குறைவாக ஓட்டினால் விபத்து நடக்கத்தான் செய்யும் என்ற விழிப்புணர்வு விதைக்கும் விதமான ஹைக்கூ நன்று. எளிமையான ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தி இருப்பது எளிதாக புரிந்துகொள்ள உதவுகின்றது.


நோய் விட்டுப் போக

வாய் விட்டு சிரிக்க முடியல

வாடகை வீடு!


GET SICK

CAN’T LAUGH OUT

RENTED HOUSE


உண்மை தான். வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. எப்போது வேண்டுமானாலும் காலியாக்கச் சொல்வார். வாடகை கூட்டிக் கொடு என்பார். ஆணி அடிக்காதே என்பார். சொந்த வீட்டின் மகிழ்ச்சி, வாடகை வீட்டில் இருப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து வடித்த ஹைக்கூ நன்று.


உடைந்த பலூனுக்கு

இரங்கல் தீர்மானமோ

குழந்தைகள் கண்ணீர்


FORA BROKEN BALLOON

CONDOLANCE RESOLUTION

CHILDREN TEARS


கையில் வைத்திருக்கும் பலூன் உடைந்து விட்டால் குழந்தை உடன் அழத்தொடங்கி விடும். சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். குழந்தையின் அழுகையை இரங்கல் தீர்மானம் என்று சொல்வது நல்ல சொல்லாட்சி. ஆங்கில ஹைக்கூவும் எளிதில் புரியும் வண்ணம் எளிமையாக இருக்கின்றன, சிறப்பு.


கட்டி முடிந்தது வீடு

முடியாமலே இருக்கிறது

அசலுக்கான வட்டி!


THE HOUSE IS FINISHED

IT IS IMPOSSIBLE

INTEREST ON THE ORIGINAL


இதில் ORIGINAL என்ற சொல்லிற்குப் பதிலாக CAPITAL என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். கொரோனா காலத்தில் வருமானமின்றி மக்கள் தவித்தப்போது மாதத்தவணை கட்டமுடியாமல் வேதனைப்பட்டனர். வட்டிக்கு வாங்கி வீடு கட்டுவதை விட வாடகை வீடே மேல் என்று உணர்த்தி விட்டனர். தவணை கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு தற்போது கூட்டு வட்டிப் போட்டு வசூல் செய்து வாட்டி வருகின்றனர். மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் வாடி வருகின்றனர். ஆயிரம் கோடிகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்-களை தப்பிச்செல்ல விமானத்தில் வழியனுப்பி வைக்கின்றனர், அவல நிலை.


முகம் தெரியாவிட்டாலும்

மனம ரணமாகிறது

அவசர ஊர்தியின் அலறல்!


EVEN IF THE FACE IS NOT VISIBLE

THE MIND DIES

THE SCREAM OF AN AMBULANCE


அவசர ஊர்தியின் சத்தம் கேட்டால் மனதிற்கு படபடப்பு வந்துவிடும். வழியில் சென்று கொண்டு இருந்தால் ஊர்திக்கு வழி விட்டுவிட்டு உள்ளே இருப்பவர் முகம் தெரியாவிட்டாலும் யாரோ, எவரோ? என்ன ஆனதோ? உயிருக்கான போராட்டம், உயிரோடு போராட்டம். இப்படி பல நினைவுகள் வந்து இளகிய மனம் ரணமாகி விடும். அந்த மனிதாபிமானத்தை ஹைக்கூ ஆக்கி உள்ளார்.


4 மொழிகளில் வந்துள்ள முதல் ஹைக்கூ நூல். ஆசிரியருக்கு பாராட்டுகள்.


Thursday, October 1, 2020

வாடிக்கையானது வன்புணர்வு


 உலகமே பார்த்தக்காட்சி

பாபர் மசூதி இடிப்புக்கு

ஆதரமில்லயாம்


அந்தக்காலத்தில்~அந்த

இடத்திலிருந்த

ராமர் கோவிலுக்கு மட்டும்

ஆதாரம் இருக்கிறதாம்


இவர்கள் யாரும் மசூதியை இடிக்கவில்லை

ஏற்றுக்கொள்கின்றோம் உங்கள் நீதியை,,,,


இடித்ததுதான் யாரு,,,

கண்டுப்பிடிக்கலாமே,,


சீதைகளை

சின்னாப்பின்னமாக்கி

சீரழித்துவிட்டு

ராமனுக்கு கோவில்கட்டும்

நகைசுவையாளர்கள்


ராமராஜ்யம் நடப்பதாக

கூவிவிட்டு

காமராஜ்யம் நடத்தும்

மன்மதராஜாக்கள்


எழுதுவோம்,,பேசுவோம்,,

அறிக்கை விடுவோம்,,,

நாளையும் நாம் எழுத

ஒரு வன்புணர்வு நிகழ்வு

வராமலா போய்விடும்,,,?!



கவிமுகில் நாகை ஆசைத்தம்பி

Sunday, September 20, 2020

ஹைபுன் பழகலாம் வாங்க,,,


 ஹைபுன் என்பது கவித்துவமான ஒரு சிறிய கட்டுரை,  இது ஒரு கதையை அல்லது பின்னால் எழுதப்போகும் மூன்று வரிக்கவிதைக்கான கருவை முன்னால் உரைநடையில் விவரிக்கிறது. கட்டுரையின் இறுதியில் முத்திரை பதிக்கும் ஹைக்கூ ஒன்றும் அமையும். இக்கவிதை வடிவம்தான் தான் ஹைபுன் என்றழைக்கப்படுகிறது.


ஜப்பானை சேர்ந்த ஹைக்கூ கவிஞர்தான் பாஷோதான் ஹைபுன் கவிதையை முதன்முதலாக எழுதியதாக சொல்லப்படுகிறது இவற்றில் சமூக அவலங்களையும் அன்றாட நிகழ்வுகளையும் எளிதாக பதிவுச்செய்ய முடிகிறது செரிவான உரைவீச்சில் முரணான செய்திகளை இணைத்து ஹைக்கூவோடு முடிப்பதே ஹைபுன் கவிதையாகும்


அதாவது உங்களுக்கு புரிவதுப்போல எளிமையாக சொல்ல வேண்டுமானால் நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தமிழாசிரியர் ஒரு செய்யுளைச்சொல்லி விளக்கம் தருவார் அல்லவா அதுப்போலதான் பள்ளியில் செய்யுளைச்சொல்லி விளக்கம் தருவார்கள் இந்த ஹைபுன் கவிதை என்பதில் விளக்கம் சொல்லி அதன்பிறகு முடிவாக அவ்விளக்கத்திற்கு பொருந்தும்படி ஒரு ஹைக்கூ சொல்ல வேண்டும் இதுதான் ஹைபுன் என்பதாகும்


இதோ சில,,,உதாரணம்


பிள்ளைகள் யாவர்க்கும் மலையனூர் அங்காளம்மனுக்கு கெடாவெட்டி காதுகுத்துவது அம்மாவுக்கு வழக்கம் உயிர்பலி கொடுக்காதீர்கள் வேண்டுகோள் படித்தப்பிறகு விலைக்கு வாங்கி நேர்ந்து விடுவாள்,,, வந்தது உயிர்பலி தடைச்சட்டம் உறுதியோடு சொன்னால் ஆத்தாவுக்கும் எனக்கும் எந்த சட்டமும் மசுருதான்,,,


*கட்டளை இட்டது மடம்*

*கை மாறியது பணம்*

*காமாட்சி மடியில் பிணம்*


(மாய வரம் நூலில் அன்பாதவன்)


என் ஹைபுன் இதோ,,,


தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா காலில் விழுந்து அம்மா கெஞ்சுவார் குடிக்காதய்யா குடும்பம் வீணாப்போய் விடுமென்று,,, வெள்ளிக்கிழமை அம்மா மீது சாமி வந்து குறிச்சொல்லும்போது மட்டும் மாற்றாக அம்மா காலில் அப்பா விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்


*அனுதினமும் அடிவாங்கும்/*

*அம்மாவின் காலில் விழுவார் அப்பா/*

*அருள்வாக்கு சொல்லும்போது மட்டும்/*


பிறக்கும் எல்லோருக்குமே கருவறை சொந்தம்தான் இதில் அவனென்ன நம்மை கருவறையில் நுழைக்கூடாது என்று சொல்வதற்கு,,,அவனும் கருவறையில் இருந்தவன்தான் நாமும் கருவறையில் இருந்தவர்கள்


உயிர்களை கருவறையில்

சுமந்து செல்கிறாள்

பெண் தெய்வம்,,,!


லிமர்புன் என்பதும் கிட்டதட்ட இதே மாதரிதான் ஒரு  உரைநடை அல்லது கவிதைகளைச்சொல்லி கடைசியாக லிமரைக்கூவை பதிவிட்டால் அது லிமர்புன் எனப்படும்



~நாகை ஆசைத்தம்பி